நாம் கடுமையான கோவிட் நெருக்கடியை கடந்துகொண்டிருக்கிறோம். ஆம்புலன்ஸ் மற்றும் வாகன வசதி இல்லாததால் ரோட்டோரத்தில் உணவு கொடுக்கும் போது ஆதரவற்ற மக்களையும் மற்றும் நமது இல்லத்தை சுற்றியுள்ள ஏழை மக்கள் ஆம்புலன்ஸிற்காக அவதிப்பட்டுகொண்டிருக்கிறார்கள். சரியான நேரத்தில் 108 ஆம்புலன்ஸ் வர முடியாத சூழல் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் அதிக வாடகை போன்ற காரணத்தினால் நமது அருகில் உள்ள அன்பானவர்களின் உயிரை காப்பாற்ற முடியவில்லை.
இத்தகைய சூழ்நிலைகளைத் தடுப்பதற்காக, இலவச ஆம்புலன்ஸ் , ஏழை மக்களுக்கு அவர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக வாங்க திட்டமிட்டுள்ளோம்
அவசரகால சூழ்நிலையில் உயிர்களைக் காப்பாற்ற நாங்கள் களத்தில் இறங்கத் தயாராக உள்ளோம். ஆம்புலன்ஸ் வாங்க எங்களுடன் கைகோர்த்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.